நீங்க
உத்தமன்/வில்லன்ஹா கேக்குற காலம் போயி ,
நீங்க
நல்லவரா / கெட்டவரானு கேக்குற காலமும் மாறி ,
நீங்க
அம்பியா / அந்நியண்ணா கேக்குற காலமும் மாறி ,
இப்போ வாங்க (பீட்ஸா போல )பழக்கலாம்னு டிரெக்ட்டா கேக்குற காலத்துல...
இன்னும் ஒரு சிலர் அதெல்லாம் பொருட்படுத்தாம ஜாதகம் , எண்கணிதம் , ஜோதிடம் மேல வெச்சி இருக்கிற அதீத நம்பிக்கை இருக்கே ... அப்பப்பப்பா ....!!!
கோர்ஸ் 1:
ஹிந்து ஜோதிடம் படி , அதாவது மணமகளின் நட்சத்திரம்
* மூலம் (Moola ) - மாமனாருக்கு ஆகாதாமா (father in law )
* அயிலயம் (Ashlesha) - மாமியாருக்கு ஆகாதாமா (mother in law )
* விசாகம் (Vishaakha) - கொழுந்தனாருக்கு ஆகாதாமா (young - brother in law)
* கேட்டை (Jyeshta) - கொழுந்தனாருக்கு ஆகாதாமா (elder - brother in law )
இவை அனைத்தும் மணமகனுக்கு மட்டுமே சாதகமாக எழுதப்பட்டு, வழக்கத்தில் இருக்கும் ஒரு சில கசப்பான
(ஆணாதிக்க ) உண்மைகள் .
கோர்ஸ் 2:
"எங்கள் நமது கண்கள் " ... அப்படினா ? நியூமெராலஜி !
உதாரணத்திற்கு - பெண்/ஆணின் பிறந்த தேதி (21-12- 1987) வெச்சிப்போமே, இதுல பிறந்த எண்(3) , கூட்டு எண் (2+1+1+2+1+9+8+7=31=3+1=4)
பிறந்த எண்(3) என்றால் அதற்கு இணையாத முதல் எண் (3) ...??? என் என்றல் இருவருக்கும் ஒரே குணம் , சிந்தணை , இன்ப/துன்பங்களை மேற்கொள்வதற்கும் சிரமப்படுவார்கள் என்பதையே கருத்தாம் !
ஒரு நம்பர் தானேனு, சரி போட்டு போகுது நினைச்சா அங்க தான் ட்விஸ்ட் , பிறந்த எண் மற்றும் கூட்டு எண் (3,12,30) இருந்தாலும் பொருத்தம் கிடையாது இது போக எண் 6,8,7 பொருந்தாத எங்கள்
என நியூமெராலஜி சொல்ல்கிறதாம் .
கோர்ஸ்2 ரிசல்டின் படி பெண்/ஆண் பிறந்த எண் 3 ஆக இருந்தால் அவர்களுக்கு பொருத்தம் இல்லாத எங்கள் 3.6,7,8,12,15,16,17.21,22,25,26...
Similarly, பிறந்த எண்(4- 4,13,22,31) , (5- 5,14,23)... போய்க்கிடயே இருக்கும் !
சராசரியா 12/30 கிளீன் போல்டு .
Type 1:
எவ்வளவோ பொருத்தம் இருப்பினும் இது போன்ற கண்மூடிதனமான நம்பிக்கையால் மணமகன்/மணமகள்
வேட்டைகள் விளையாட்டாக முடிவடைகிறது .
Type 2:
மண்ணெண்ணெ , வெப்பென்ன, வெளக்கெண்ண '
எண் கணிததால' நன்மை எனக்கென்னன்னு கன்பூசியன்லயே மீதி இருக்கிற பதினெட்டு எண்கள் ஓட இவங்க கோர்ஸ் 3 ஓடி போவாங்க ...
கோர்ஸ் 3:
அப்படி , இப்படினு
வாங்க பழக்கலாம்னு சொல்லுற லெவெலுக்கு வந்த பிறகு பூமில இருந்தே நிலா , நட்சத்திரம் , மொத்த பிரபஞ்சத்தையே கண் கொ(ல்ல)ள்ள பார்பீங்க...
அப்படியாப்பட்ட கோர்ஸில் பழகிக்கொண்டு இருக்கையில், நாசுக்கா சில இளங்காளை(லை)கள் பேசி கொண்டு இருக்கும்போது ...
Boy1 : மச்சி , உன்ன பார்த்து ஒரு பொண்ணு
தேவாங்கு போல இருக்கிறனு சொன்ன , எப்பிடிடா ரியாக்ட் பண்ணுவ ?
Boy 2 : டேய் ...நீயும் என்ன கலாய்க்குறியாடா !
Boy1 : இல்ல மச்சி , என்ன ஒரு பொண்ணு கேவலமா திட்டி பங்கம்படுத்திட்டா... அவள என்ன செய்யுறதுனே புரியலடா ...
Boy2: நல்ல வாழ்ந்துகாட்டி , அவள அல்ரெடி திணைக்கும் கொன்னுக்கிட்டு தான் இருக்கேன் மச்சி.
Boy 1 : 'அல்ரெடி' ? ...!
Boy 2: Simple !
'வேட்டையாடாமல் விளையாடு' நண்பா
என்ன கதை முடிஞ்சிடுச்சா ???
சுமார் எழுத்து குமார் , ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து எழுதலாம்னு இருக்காரு , அதாங்கோ... :)